வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 27 டிசம்பர் 2018 (16:51 IST)

யார் இந்த வங்கா பாபா? சொன்னதெல்லாம் பலிக்குதே.. பீதியில் உலக நாடுகள்

12 ஆண்டுகளுக்கு முன் இறந்து போன பல்கேரியாவை சேர்ந்த வங்கா பாபாவின் நினைவு இப்போது இந்தோனேசியவை தாக்கிய சுனாமிக்கு பிறகு வந்துள்ளது. 
 
ஆம், வங்கா பாபா உலகில் நடக்கவிருக்கும் ஆபத்துக்களை முன்கூட்டியே கணித்து வைத்து சென்றார். அதுவும் இந்தோனேசிய சுனாமி பலரை காவு வாங்கிய பின்னர் இவை கணித்து பலிக்க துவங்கி விட்டதோ என்ர சிந்தனையும் எழுந்துள்ளது. 
 
வங்கா பாபா, அவருக்கு 12 வயதிருக்கும் போது புயல் ஒன்றில் சிக்கி பல நாட்களுக்கு பின்னர் கண்களில் மண் மூடிய நிலையில் அவரது குடும்பத்தாரால் கண்டுபிடிக்கப்படார். இதனால் அவர் தன் பார்வையையும் இழந்தார். 
 
இந்த நிகழ்வுக்கு பின்னரே எதிர்காத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களை முன்கூட்டியே கணிக்க துவங்கினார். இவர் இறப்பதற்கு முன்னர் ஆசியாவை ஒரு பெரிய சுனாமி தாக்கும் என்றும், பாகிஸ்தான், இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பகுதிகள் காணாமல் போகும் என கணித்திருந்தார். 
 
அதே போல் தற்போது இந்தோனேசிய சுனாமி கடும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரஷ்யா உலகின் அதிபதியாக மாறும் ஐரோப்பா பயனற்று போகும் எனவும் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.