தொடர்புடைய செய்திகள்
- தேச பிதா காந்தி இல்லையா... மோடியா??
- சசி தரூர் பகிர்ந்த நேரு - இந்திரா காந்தி புகைப்படத்தின் உண்மை என்ன?
- கர்ப்பிணி மனைவிக்கு’ காதல் புத்தகம் ’கொடுத்த கணவர் - வைரலாகும் வீடியோ
- அமெரிக்க அதிபர் டிரம்பை முறைத்து பார்த்த சிறுமி ! வைரல் வீடியோ
- பன்னி சுட்ற துப்பாக்கியால அவன சுட்ருங்க – ராஜேந்திர பாலாஜியின் துடுக்குப் பேச்சு !
மகாத்மா காந்தியின் தபால் தலையை வெளியிட்ட ஐ.நா.
மகாத்மா காந்தியின் 150 ஆவது ஆண்டு பிறந்ததினத்தை முன்னிட்டு ஐ.நா.தலைமையகம் காந்தியை கௌரவிக்கும் வகையில் காந்தியின் தபால் தலையை வெளியிட்டுள்ளது.
ஐ.நா.தலைமையகத்தில் ”தற்கால உலகில் மகாத்மா காந்தியின் பங்களிப்பு” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமெரிக்காவுக்கு சென்றுள்ள மோடி கலந்துகொண்டார். அவருடன் சிங்கப்பூர், நியூஸிலாந்து, வங்கதேசம், ஜமைக்கா ஆகிய நாடுகளின் பிரதமர்களும் கலந்து கொண்டனர்.
அனைவரும் சேர்ந்து நியூ யார்க் நகரில் காந்தி அமைதி பூங்காவை திறந்துவைத்தனர். பின்பு அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ”மஹாத்மா காந்தி இந்தியா மட்டுமல்ல, உலகத்தின் அமைதியை ஊக்குவித்தவர்” என்று புகழ்ந்து கூறினார்.
பின்பு, மோடியுடன், அதில் கலந்து கொண்ட உலகத் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து, மகாத்மா காந்தியின் 150 ஆவது ஆண்டின் பிறந்த தினத்தை கௌரவிக்கும் விதமாக காந்தியின் தபால் தலையை வெளியிட்டனர்.
அடுத்த கட்டுரையில்
