செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2020 (16:07 IST)

கடிக்க வந்த பாம்பின் கழுத்தைப் பிடித்த நபர்…வைரலாகும் வீடியோ

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்ற சொலவடை உண்டு. இந்நிலையில் ஒரு இளைஞர் தன்னைக் கடிக்க வந்த பாம்பின் கழுத்தைப் பிடித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஒரு அலுவலகத்தில் திடீரெனப் புகுந்த பாம்பு ஒன்று அங்கிருந்த காவலரை கடிக்க முயன்றது.

இதில், மிரண்டு போன அந்த நபர் பாம்பை வெளியேற்றினார். சிறிது நேரம் கழித்து அந்தே நபரைக் குறிபார்த்துக் கடிக்க வந்த பாம்பு அவரது காலில் சிக்கியது. இதையடுத்து, அதைக் கையில் எடுத்துக்கொண்டு போய்,வெளியேவிட்டு வந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சுமார் 1 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதேசயம துணிச்சலாகப் பாம்பைப் பிடித்தவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.