1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : சனி, 2 நவம்பர் 2019 (16:56 IST)

’தாய் 'மொழியில் 'திருக்குறளை' வெளியிடும் பிரதமர் மோடி ! தமிழர்கள் பெருமிதம் !

’தாய் 'மொழியில் 'திருக்குறளை' வெளியிடும்  பிரதமர் மோடி ! தமிழர்கள் பெருமிதம் !
ஆசியான் - இந்தியா உச்சி மாநாடு நாளை தாய்லாந்து நாட்டில் நடைபெறவுள்ளது இதில் பங்கேற்பதற்காக மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தாய்லாந்து சென்றார். தலைநகர் பாங்காக் விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதையடுத்து, மோடி, பாங்காக் தேசிய உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறவுள சவஸ்தே பிஎம்மோடி என்ற நிகழ்ச்சியில் கொண்டு, தாய்லாந்து வாழ் இந்தியர்க மத்தியில்  உரை நிகழ்த்துகிறார்.
 
மேலு, சீக்கியர்களின் மத குருவான குருநானக்கின் 550 வது  பிந்த நாள் நினைவாக சிறப்பு நாணத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். அத்துடன், தாய்லாந்து மொழியான தாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும் வெளியிடுகிறார். இதனல் தமிழர்கள் பெருமிதம் அடைந்துள்ளனர்.