1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Sydney University project Indian flag

கொரோனாவிலிருந்து மீண்டு வா இந்தியா! – சிட்னி பல்கலைகழகத்தில் மூவர்ண கொடி!

World
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியா மீண்டு வர வேண்டி சிட்னி பல்கலைகழகம் மூவர்ண கொடி நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் பலரும் உயிரிழந்து வரும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் இந்தியா கொரோனாவிலிருந்து மீள வேண்டி பல நாடுகளில் இந்திய மூவர்ண கொடி நிறத்தில் ஒளி விளக்குகள் மூலம் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைகழகத்தில் இந்தியா கொரோனாவிலிருந்து மீள வேண்டி மூவர்ண கொடியின் நிறங்களில் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
இறந்த உடலுக்கு மத்தியில் நோயாளிகளுக்கு சிகிச்சை: புதுவையில் அதிர்ச்சி!