தொடர்புடைய செய்திகள்
- நேற்று Black Monday தான்.. ஆனால் இன்று Good Tuesday.. 1200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்..!
- சீனாவுக்கு மட்டும் Extra 50% வரி விதிக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை..!
- ஆட்டம் கண்ட உலக பங்குசந்தை! ஹாயாக Vacation சென்ற ட்ரம்ப்! - பழிவாங்க சீனா எடுத்த முடிவு!
- இன்று ஒரே நாளில் சுமார் 3000 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்.. தலையில் கை வைத்த முதலீட்டாளர்கள்..!
- 37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?
டிரம்ப் வரிவிதிப்பு எதிரொலி: ஆசிய பங்குச்சந்தை எழுச்சி.. ஐரோப்பிய பங்குச்சந்தை வீழ்ச்சி..!
இந்தியா, சீனா, கனடா உள்ளிட்ட ஒரு சில நாடுகளுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ள நிலையில், நேற்று பங்குச் சந்தை மிகப்பெரிய அளவில் சரிந்தது. ஆனால் இன்று இந்தியாவில் பங்குச் சந்தைகள் எழுச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பங்குச் சந்தை, ஜப்பான் பங்குச் சந்தை, ஹாங்காங் பங்குச் சந்தை ஆகியவை இன்று காலை முதல் எழுச்சியுடன் விற்பனையாகி வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் ஐரோப்பிய பங்குச் சந்தை இன்னும் வீழ்ச்சியிலிருந்து எழவில்லை.
லண்டன் மற்றும் பாரீஸ் பங்குச் சந்தைகள் மிக மோசமாக சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், அமெரிக்க பங்குச் சந்தையும் மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரி விதிப்பு முறையை திரும்ப பெறத் திட்டவட்டமாக மறுத்துள்ளதாகவும், இதனால் வர்த்தக போர் நீடித்தே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
"சில நேரங்களில் நோய்களை கட்டுப்படுத்த கசப்பான மருந்தை உட்கொள்ள வேண்டியிருக்கும்; அதுபோலவே இந்த பங்குச் சந்தை நிலவரமும் என்று கூறிய டிரம்ப் கூடுதல் வரி அவசியம்" என தெரிவித்ததாகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran
