தொடர்புடைய செய்திகள்
- போக்குவரத்தை சரிசெய்யும் ‘குட்டிப்புலி’ ரோபோ!.. தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல்..!
- 400 கிலோ கஞ்சா கடத்திய இளம்பெண்.. ஐதராபாத் விமான நிலையத்தில் கைது..!
- நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!
- சி.டி.எஸ் சிறப்பு மருத்துவமனையில் ரோபோடிக் முழங்கால் அறுவை சிகிச்சை!
- ராமேஸ்வரம் பள்ளியில் AI ஆசிரியர்.. மாணவர்களின் கேள்விகளுக்கு அசத்தல் பதில்..!
வாடகை தாய்க்கு பதில் குழந்தை பெற்று கொடுக்கும் ரோபோ.. சீன விஞ்ஞானிகளின் அபூர்வ கண்டுபிடிப்பு..!
குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு வாடகைத் தாய் முறை ஒரு வரமாக இருக்கும் நிலையில், அதற்கு மாற்றாக செயற்கை கருப்பை சுமக்கும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழில்நுட்பம், எதிர்காலத்தில் மனித குழந்தைகளைப் பெற்றெடுக்கும் முறையை முற்றிலும் மாற்றியமைக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கர்ப்ப கால ரோபோக்களில் செயற்கை கருப்பை பொருத்தப்பட்டு, ஒரு குழாய் மூலம் கருவிற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் செலுத்தப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், மனித தலையீடு இல்லாமல் கருவின் வளர்ச்சி கண்காணிக்கப்படும். இந்த முயற்சி, குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகளுக்கு ஒரு புதிய வழியை திறக்கும் என நம்பப்படுகிறது.
இருப்பினும், இந்த தொழில்நுட்பம் பல நெறிமுறை சார்ந்த கேள்விகளை எழுப்பியுள்ளது. மனித இனப்பெருக்கத்தை ஒரு இயந்திரத்தின் மூலம் நடத்துவது சரியானதா என்பது போன்ற விவாதங்கள் உலக அளவில் எழுந்துள்ளன. இந்த தொழில்நுட்பம் குறித்த தொடர் ஆய்வுகள் மற்றும் கடுமையான நெறிமுறை கட்டுப்பாடுகளுக்குப் பின்னரே, பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva
