1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Philippines president rodrigo duterte contraversy comment

ஒவ்வொரு ராணுவ வீரரும் 3 பெண்களை கற்பழிக்கும் திறமை பெற்றவர்கள். அதிபரின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு

Philippines
ஒரு நாட்டில் உள்ள பெண்களுக்கு முழு பாதுகாப்பு கொடுத்து அவர்களை ஆண்களுக்கு சமமாக, ஆண்களை விட பலமுள்ளவர்களாக மாற்ற வேண்டிய பொறுப்பு ஆள்பவர்களுக்கு உண்டு. குறிப்பாக அந்த நாட்டின் பிரதமர் அல்லது அதிபருக்கு அதிக பொறுப்பு உண்டு. ஆனால் ஒரு நாட்டின் அதிபரே பெண்கள் குறித்து கீழ்த்தரமான கருத்து ஒன்றை கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.



 


சமீபத்தில் ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூட்டரெட் பேசியபோது, '''எங்கள் நாட்டு ராணுவத்தினர் ஒவ்வொருவரும் 3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு வலிமை பெற்றவர்கள்'' என்று கூறியுள்ளார். அதிபரின் இந்த கருத்துக்கு பிலிப்பைன்ஸில் இருந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள பெண்கள் அமைப்புகள் கண்டித்து வருகின்றன.

ராணுவ வீரர்களின் பெருமையை கூற எத்தனையோ வழிகள் இருக்கும்போது கேவலமான இதுபோன்ற உதாரணங்கள் தான் கூற வேண்டுமா? என்று கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
About Writer
sivalingam
அடுத்த கட்டுரையில்
உடைகிறது ஓபிஎஸ் அணி: வெளியேறுகிறார் நத்தம் விஸ்வநாதன்?