1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Pakistan accepted that they supported terrorism

பயங்கரவாதத்துக்கு துணைபோனதை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

பாகிஸ்தான்
பயங்கரவாதத்துக்கு துணைபோனது உண்மைதான் என பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார்.


 

 
பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் இருப்பதாக உலக நாடுகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு துணைபோனது உண்மைதான் என ஒப்புக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் நாடு என இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. அண்மையில் அமெரிக்கா கூட இதை தெரிவித்தது.  இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் கூறியதாவது:-
 
லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற அமைப்புகள் பாகிஸ்தான் மண்ணில் செயல்பட்டது உண்மைதான். ஆனால், அந்த அமைப்புகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பதன் வாயிலாக பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிராக உள்ளது என்பதை சர்வதேச சமூகத்துக்கு காட்டுவோம் என்றார்.
About Writer
Abimukatheesh
அடுத்த கட்டுரையில்
13 கோடி வாடிக்கையாளர்கள்; 365 நாட்களில்: ஜியோ அசத்தல்!!