தொடர்புடைய செய்திகள்
- ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தாவிட்டால் மீண்டும் வரி விதிப்பேன்: டிரம்ப் எச்சரிக்கை.. கொள்முதலை அதிகரித்த இந்தியா..!
- ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..
- முதல்முறையாக நேருக்கு நேர் சந்திக்கும் ஜெலன்ஸ்கி - புதின்? - ட்ரம்பின் அடுத்த போர்நிறுத்த வியூகம்!
- ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதா இந்தியா? - ட்ரம்ப் பேசியது குறித்து மத்திய அரசு விளக்கம்!
- இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!
போரை நிறுத்துற ஐடியா இல்ல! அணு ஆயுத படை ஒத்திகை நடத்திய ரஷ்யா!
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயன்று வரும் நிலையில் ரஷ்யா அணு ஆயுத படை ஒத்திகை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த 4 ஆண்டு காலமாக போர் நடந்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க அதிபராக வந்த டொனால்டு ட்ரம்ப் இந்த போரை நிறுத்துவதை தனது முதன்மையான பணியாக கூறியிருந்தார். அதற்காக கடுமையாக முயற்சித்தும் வருகிறார். அது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் - டொனால்டு ட்ரம்ப் இடையே அலாஸ்காவில் சந்திப்பு நடந்தது.
ஆனால் அதில் போர் நிறுத்தம் தொடர்பான திருப்தியான முடிவுகள் எட்டப்படவில்லை. அதை தொடர்ந்து புதினை பல இடங்களில் ட்ரம்ப் விமர்சித்து பேசியுள்ளார். தொடர்ந்து ஹங்கேரியில் நடக்கும் மாநாட்டில் மீண்டும் புதினை சந்தித்து பேச உள்ளதாக ட்ரம்ப் கூறியிருந்தார்.
ஆனால் ரஷ்யாவோ போரை தொடர்ந்து நடத்துவதிலேயே திட்டவட்டமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ரஷ்ய ராணுவம் அணு ஆயுத படைகளின் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. இதில் கலந்துக் கொண்ட புதின் அணு ஆயுதங்களில் செயல்பாடுகளை மேற்பார்வையிட்டுள்ளார். இந்த ஒத்திகையில் பாலிஸ்டிக் ஏவுகணைகள், நீர்மூழ்கி ஏவுகணைகள், குண்டுவீச்சு விமானங்கள் உள்ளிட்டவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
Edit by Prasanth.K
