1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வியாழன், 2 செப்டம்பர் 2021 (16:19 IST)

இந்தியாவில் பரவும் புதிய வகை வைரஸ் !

உத்தரபிரதேசத்தில் ஸ்க்ரப் டைபஸ் என்ற புதிய வகை வைரஸ்தொற்று பரவி வருகிறது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து  உலக நாடுகளுக்குப்பரவிய கொரொனாவால் பல கோடிப்பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது.  விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே  3 ஆம் அலை தீவிரமடையும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் உத்தர பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் Scrub Typhus என்ற புதிய வைரஸ் பரவி வருகிறது. இதனால், நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. மேலும், இந்து நாடு முழுவதும் பரவிடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.

மேலும், இத்தொற்று ஓரியண்டினா சுட்சுகாமுஷி எனும் பாக்டீரியால் ஏற்படுகிறது எனவும், இந்த வகை  சிகர்ஸ் (லார்வா )  பூச்சிகள் மனிதர்களைக் கடிக்கும்போது, தொற்று மனிதர்களுக்குப் பரவுவதாக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.