1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (12:49 IST)

பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியே நடைபெறுகிறது; வெளியுறவு இணை அமைச்சர் வி.கே.சிங்

பாகிஸ்தானில் புதிய அரசு பொறுப்பேற்றாலும் இன்னும் ராணுவே ஆட்சி செய்கிறது என்று இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

 
பாகிஸ்தானில் அண்மையில் புதிய அரசு பொறுப்பேற்றது. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமாராக பொறுப்பேற்றுள்ளார். ஆனால் எல்லை பகுதிகளில் தொடர்ந்து ஊடுருவல் சம்பங்கள் நடைப்பெற்று கொண்டிருக்கிறது. 
 
இந்நிலையில் இந்திய எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தானின் ஊடுருவல் குறித்து இந்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் வி.கே.சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது:-
 
பாகிஸ்தான் இன்னும் ராணுவமே ஆட்சி செய்து வருகிறது. பாகிஸ்தான் அரசு ராணுவத்தில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதா? இல்லையா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். இந்தியாவில் கொள்கை மிக தெளிவாக உள்ளது. அதற்கான சூழ்நிலை பலனளிக்கும் வகையில் இருக்கும்பொது பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறியுள்ளார்.