1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (12:47 IST)

அசஞ்ச நேரத்துல ஆபாசமா வீடியோ எடுக்கறதுதான் பொழப்பே... பிடிப்பட்ட மகா மட்டமான ஆள்!

கொலம்பியாவில் பெண்களை ஆபாசமாக படம்பிடிப்பதும் அதை இணையத்தில் பதிவிடுவதையுமே ஒருவன் பிழைப்பாக வைத்துள்ளான். 
 
கொலம்பியாவை சேர்ந்த 53 வயதான ஒருவன் இளம் பெண்களை திருட்டுதனமாக வீடியோ எடுத்து அதை இணையதளத்தில் பதிவிடுவதையே வேலையாக வைத்திருந்துள்ளான். இவன் மீது எழுந்த சில புகார்களால் போலீசார் இவனை கண்காணித்து சமீபத்தில் கையும்களவுமாக பிடித்துள்ளனர். 
 
இவனது மோசமான செயலை பற்றி போலீஸார் தெரிவித்ததாவது, ஒரு வருடமாக மெட்ரோ, சூப்பர் மார்கெட் ஆகிய இடங்களில் பெண்களை பின்தொடர்ந்து தனது பைக்குள் செல்போனை மறைத்து வைத்து ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளான். 
 
சுமார் 550-க்கும் மேற்பட்ட பெண்களை இப்படி ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளான். அதில் 283 பெண்களின் வீடியோவை இணையத்தில் பதிவேற்றி லட்சக்கணக்கான வியூஸை பெற்றுள்ளான். 
 
மேலும், அவனது வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டதில் லேப்டாப், ஹார்ட் டிரைவ்கள் என அனைத்திலும் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் இருந்ததை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.