வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 25 பிப்ரவரி 2021 (08:45 IST)

கடலில் சரிந்த கல்லறை... சவப்பெட்டிகளை தேடும் அவலம்!

இத்தாலியில் நிலச்சரிவால் இடிந்து கடலில் விழுந்த நூற்றுக்கணக்கான கல்லறைகளை தேடும் பணி தீவிரம். 
 
இத்தாலி நாட்டின் கமோக்லி நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில், கடலோரமாக அமைந்திருந்த கல்லறையின் ஒரு பகுதி இடிந்து கடலுக்குள் விழுந்தது. இதனால் பல சவப்பெட்டிகள் காணாமல் போய் உள்ளது. எனவே இதனை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. 
 
அதோடு மீதமிருக்கும் கல்லறையில் இருந்து சவப்பெட்டிகள் கடலுக்குள் விழுந்துவிடக் கூடாது என அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.