தொடர்புடைய செய்திகள்
- ரஷ்ய தடுப்பூசி நல்லா வேலை செய்யுது! – உலக சுகாதார நிறுவனம் பாராட்டு
- உலக கொரோனா தொற்று: பாதிப்பு, குணமடைந்தோர், உயிரிழப்பு குறித்த தகவல்!
- குளிர்காலத்தில் கொரொனா தொற்று வேகமாகப் பரவும் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
- ட்ரம்புக்கு விஷ கடிதம் அனுப்பிய பெண் கைது! – அமெரிக்காவில் பரபரப்பு!
- மறுபடியும் 2 கோடி மாணவிகள் பள்ளி செல்ல முடியாது! – மலாலா வருத்தம்!
முதலைகள் ஆற்றில் சிக்கிய திமிங்கலம்..! பல நாட்கள் கழித்து கடலுக்கு எஸ்கேப்!
ஆஸ்திரேலியாவில் கடலில் இருந்து வழிதவறி ஆற்றுக்குள் புகுந்த திமிங்கலத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் கடல்பகுதியில் சுற்றி வந்த ஹம்பேக் திமிங்கலங்களில் மூன்று வழி தவறி ஆஸ்திரேலிய முதலை ஆற்றுக்குள் புகுந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் வைரலானது. மூன்று திமிங்கலங்களில் இரண்டு ஆற்றில் சிறிது தூரம் பயணித்த நிலையில் மீண்டும் கடலுக்குள் திரும்பிய நிலையில், ஒரு திமிங்கலம் மட்டும் ஆற்றில் பல கிலோ மீட்டர் தூரம் உள்ளே புகுந்துள்ளது.
கடந்த 17 நாட்களாக ஆற்றுப்பகுதியில் சுற்றி வந்த அந்த திமிங்கலத்தை மீண்டும் கடலுக்கு அனுப்ப பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் ஒருவழியாக தானாகவே கடலுக்கு செல்வதற்கு சரியான பாதையை கண்டறிந்த திமிங்கலம் எந்த ஆபத்துமின்றி கடலுக்குள் சென்று சேர்ந்துள்ளது.
ஒரு திமிங்கலம் வழிதவறி ஆற்றுக்குள் நுழைவது இதுவே முதல்முறை என ஆஸ்திரேலிய விலங்கியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
