1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 28 அக்டோபர் 2021 (21:46 IST)

’’உணவுத் தட்டுப்பாடு’’- மக்களை குறைவாகச் சாப்பிட சொன்ன அதிபர்

உணவுத் தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்களைக் குறைவாகச் சாப்பிடச் சொல்லி அதிகம்  கிம் ஜங் உத்தரவிட்டுள்ளார்.

உலகில்  வல்லரசான அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக இருக்கும் நாடு என்றால் அது வடகொரியா.

சிறிய நாடாக இருந்தாலும் இந்நாட்டை ஆளும் அதிபர் கிம் ஹாங் , டிரம்ப் வடமெரிக்க அதிபராக இருந்தபோது, அந்நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்தார்.  அதனால் வடகொரியாவுக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது .பின்னர், அவருடன் நட்பு  பாராட்டினார்.

இந்நிலையில், வடகொரியாவில் தற்போது  உணவுத்தட்டுப்பாடு நிலவுவதால் அதிபர் கிம் ஜான் 2025 ஆம் ஆண்டு வரை  நாட்டு மக்கள் குறைவாகச் சாப்பிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அங்கு ஒரு வாழைப்பழம் ரூ.3,300 க்கு விற்பனையாகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் பெரும் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர்.