வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2020 (19:54 IST)

ஃபேஸ்புக்கில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பரப்பிய பொய் செய்திகள்...

பாகிஸ்தான் நாடு இந்தியா மீதான பொய்த்தகவல்களைப் பரப்ப பயன்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் கணக்கை நீக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐநாவுக்கான இந்திய தூதரகம்  வெளியிட்டுள்ள செய்தியில்,  பாகிஸ்தான் நாட்டை மையமாகக் கொண்டு செயல்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்குகள் மூலம் பல போலியான செய்திகள் இடம்பெற்றன.

அதில் பிரதமர் மோடி மற்றும் பாஜக மீது  விமர்சனம் செய்யப்பட்டு வந்தன. இந்த மாதிரி பொய்யான தகவல்களைப் பரப்பிய 103 ஃபேஸ்புக் பக்கங்கள் மற்றும் 78 ஃபெஸ்புக் குழுக்களையும், 105 இன்ஸ்டாகிராம் கணக்குகளை முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.