1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (08:24 IST)

இந்தியாவை வம்புக்கு இழுக்கும் ட்ரம்ப்: இப்போ இது தேவையா?

தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் இந்தியாவை சாடியுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் கொரோனா பாதிப்பையும் மீறி ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடனும் மற்றும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய அதிபர் ட்ரம்பும் பரபரப்பாக தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  
 
சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த ட்ரம்ப் மீண்டும் தனது பிரச்சார பணிகளை துவங்கியுள்ளார். இந்நிலையில் பிரச்சாரத்தின் போது அவர் இந்தியாவை சாடியுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப் பேசியதாவது, 
 
சுத்தமான காற்றை நான் நேசிக்கிறேன் என எனது மக்களிடம் நான் தொடர்ந்து கூறிக்கொண்டு இருக்கிறேன். ஆனால் மாசுபாடு நிறைந்த வரைபடத்தை நீங்கள் பார்க்கிறீர்கள். ரஷியா, சீனா, இந்தியா போன்ற நாடுகளே அதை தூண்டுகின்றன. 
 
தேர்தல் பிரசாரத்தில் இந்தியாவை டிரம்ப் குற்றம் சாட்டியிருக்கும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் காற்று மாசுபாடு தொடர்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளை டிரம்ப் குற்றம் சாட்டுவது இது முதல் முறையல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.