வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 8 ஏப்ரல் 2020 (12:32 IST)

நீண்ட 76 நாட்களுக்கு பிறகு வுகானில் தளர்ந்த ஊரடங்கு!

சீனாவின் வுகான் நகரில் 76 நாட்களுக்கு பின் தற்போது ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. 
 
சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய இந்த கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 1,430,528 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 82,023 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சீனா கொரோனாவை எதிர்த்து போராடி தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. 
 
இந்நிலையில், சீனாவின் வுகானில் 76 நாட்களுக்கு பின் தற்போது ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. பொதுமக்கள் முகக்கவசங்கள் அணிந்து கொண்டு சாலைகளில் இயலாபாக நடமாட தொடங்கியுள்ளனனர் என்பது குறிப்பிடத்தக்கது.