1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (17:07 IST)

ரூ.2 லட்சம் கோடி சொத்துகளுக்கு பிள்ளைகள் வாரிசு அல்ல- செல்வந்த தம்பதியர் அறிவிப்பு

andrew
ஆஸ்திரேலிய நாட்டில் மிகப்பெரிய பணக்காரர் ஆண்ட்ரூ ட்விக்கி. இவரது மனைவி நிக்கோவா. இந்தத் தம்பதியர் தங்களுக்குச் சொந்தமான ரூ.2 லட்சம் கோடி சொத்துகளை தொண்டு நிறுவனங்களுக்கு அளிப்பதாக அறிவித்துள்ளனர்.

மேலும், தங்களின் சொத்துகளுக்கு தங்களின் பிள்ளைகள் வாரிசுகளாக இருக்க மாட்டார்கள் என அறிவித்து, தங்களின் ரூ.2 லட்சம் கோடி சொத்துகளை பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்குகொடுக்கவுள்ளதா அறிவித்துள்ளனர்.

உள் நாட்டு ஆதரவு, மாணவர்களின் கல்வி, கேன்சர் ஆராய்ச்சி உள்ளிட்ட அமைப்புகளாகச் செயல்படும் தொண்டு நிறுவனங்களுக்கு அளிப்பதாக  வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.
Australian Billionaire

தன்னலமற்ற பணக்காரத் தம்பதிகளின் இந்த முடிவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.