வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 23 மே 2023 (22:41 IST)

இம்ரான் கானுக்கு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் ஜாமீன்

இம்ரான் கானுக்கு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் வரும் ஜூன் 8 ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

பாகிஸ்தான் நாட்டில், ஊழல் வழக்குத் தொடர்பாக முன்னாள் பிரதமர் இம்ரான் கானை நீதிமன்ற வளாகத்தில் வைத்து ரேஞ்சர் படையினர் கைது செய்தனர்.

’இம்ரான் கைது சட்டவிரோதம் என்று கூறி இன்னும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து,  ‘இம்ரான்கான் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அவரை போலீஸ் லைன் விருந்தினர் மாளிகையில் வைக்கப்படுவார். அவர் கைதியாக கருதப்படமாட்டார். அவரது பாதுகாப்பை போலீஸார் உறுதிசெய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

இவ்வழக்கு  இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இம்ரான் கானுக்கு  2 வாரம் ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்.

கடந்த மார்ச் 18 ஆம் தேதி  கருவூல முறைகேடு வழக்கி விசாரணைக்காக இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு இம்ரான்கான் ஆஜராக வந்தார். அப்போது, அவரது கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதில், போஸீஸாருக்கும் அவரது கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 25 போலீஸார் காயமடைந்தனர். இதுகுறித்து, இம்ரான் மீது போலீஸ் ஸ்டேசன்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் தொடர்பாக இம்ரான் கானுக்கு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் வரும் ஜூன் 8 ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.