1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 6 ஜூலை 2023 (17:34 IST)

கைலாசா நாட்டின் புதிய பிரதமர் நடிகை ரஞ்சிதா? இணையதளத்தில் வைரலாகும் தகவல்

ranjitha
தமிழ்நாட்டைச் சேர்ந்த நித்யானந்தா பெங்களூரில் ஆசிரமம் நடத்தி வந்த   நிலையில், அவர் மீது பாலியல் புகார்கள்  கடத்தல் புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, அவரை போலீஸார் தேடி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற நித்யானந்தா , கைலாசா என்ற தனித் தீவில் தன் சிஷ்யர்களுடன் வசித்து வருவதாகக் கூறினார்.

இந்த நாட்டிற்கு தனி பாஸ்போர்டு, ரூபாய்  நாணயங்கள், தனிக்கொடி உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டு, வர்த்தக ரீதியீலான பல நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்வதாக பல நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் ஒப்பந்தங்களில் கைழுத்திட்டனர்.

அதேபோல், நித்யானந்தாவின் கைலாசா  நாட்டை இறையாண்மை பெற்ற நாடாக அமெரிக்க  நாட்டைச் சேர்ந்த நெனார்க் நகர  நிர்வாகம் அங்கீகரித்தது.

சமீபத்தில் நித்யானந்தாவுக்கு உடல் இன்லை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, இணையதள லிங்க்டு இன் பக்கத்தில் ரஞ்சிதாவின் புகைப்படம் நித்யாந்தா மாயி சுவாமி என்றும் அதற்கு கீழே கைலாசவின் பிரதமர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தத் தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.