1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 29 அக்டோபர் 2022 (21:19 IST)

மகளைக் கடித்த நண்டை கடித்து விழுங்கிய தந்தை...விபரீத சம்பவம்

crab eat in china
சீன நாட்டில் தன் மகளைக் கடித்த நண்டை கடித்துச் சாப்பிட்ட  நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனா நாட்டில் ஜெஜியாங் என்ர நகரில் வசித்து வருபவர் லூ 939). இவர் சில மாதங்களுக்கு முன் தன் வீட்டில் வளர்க்க வேண்டி , இரண்டு நண்டுகள் வாங்கியுள்ளார்.

இதில், ஒரு நண்டு  அவர் மகளைக் கடித்தது. இதனால் வலியால் கதறிய மகளின் அழுகுரல் கேட்ட லூ, ஓடி வந்து, கோபத்துடன், அந்த நண்டை அப்படியே  கடித்து,விழுங்கியுள்ளார்.

இந்த நிலையில், 2 மாதங்களுக்கு பிறகு அவருக்கு முதுகில் வலி ஏற்பட்டுள்ளது, இதுகுறித்த், மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்டபோதுதான், நண்டை பச்சையாகக் கடித்ததால் அவரின் ஜீரண மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளதையும் 3 வித பாக்டீரியாக்களால்ல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

தற்போது, இதிலிருந்து குணம்பெற அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Edited by Sinoj