1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. 7th class student shooting in school 8 killed

பள்ளியில் 7 ஆம் வகுப்பு மாணவன் துப்பாக்கிச்சூடு ....8 பேர் பலி

serbia
செர்பியா நாட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவர் ஒருவர்  நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியர், 6 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பியா கண்டத்தில் அமைந்துள்ள நாடு செர்பியா. இந்த நாட்டில் தலைஅங்கர் பல்கிரெடி மாகாணத்தில் விரகார் மாவட்டத்தில் ஒரு பள்ளிக்கூடம் அமைந்துள்ளது.

இப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் இன்று  திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினான். இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் என 7 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் துப்பாக்கிச்சூட்டில் 8 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து, துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய மாணவனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
என்னை கட்சியில் இருந்து நீக்க வைகோவுக்கு பயம்: மதிமுக அவைத்தலைவர் துரைசாமி