1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 18 பிப்ரவரி 2023 (23:38 IST)

பல்கேரியாவுக்குள் நுழைந்த லாரி கண்டெய்னரில் அகதிகள்...18 பேர் பலி

afghan refuges
துருக்கியில் இருந்து பல்கேரியாவுக்குள்  நுழைந்த லாரி கண்டெய்னரில்  அடைத்துவைக்கப்பட்ட அகதிகள்18 பேர்  பலியாகினர்,.

ஆப்பிரிக்க , ஈராக், சிரியா , மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை மற்றும்  வாழ்வாதாரத் தேவைக்காகவும் வேண்டி, அருகிலுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு சட்ட விரோதமான நுழைந்து வருகின்றனர்.

அந்த வகையில், துருக்கியில் இருந்து பல்கேரியாவுக்குள் ஒரு லாரி கண்டெய்னர் நுழைந்தது.

அங்கு நின்றிருந்த பாதுகாப்புப் படையினர் ஒரு பகுதியில் நின்றிருப்பதைப் பார்த்தனர். அதை நீக்கிப் பார்த்தபோது, கண்டெய்னருக்குள் 52 பேர் அடைத்து வைக்கப்பட்டிருப்பதும், அதில், 18 பேர் உயிரிழந்தனர். மீதி, 34 பேர் ஆபத்தான நிலையில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தக் கண்டெய்னரில் இருந்த அகதிகள் அனைவரும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.