வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (17:24 IST)

அமெரிக்காவில் ஒரே நாளில் 33,400 பேர் பாதிப்பு

அமெரிக்காவில் ஒரே நாளில் 33 ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸால் பல்வேறு நாடுகள் ஸ்தமித்து உள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் ஒரு புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது.

அதில், நேற்று ஒரேநாளில் 33,494 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதனால் அங்கு பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 7,34,694 பேர் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவரை 1849 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , மொத்தமான பலியானோரின் எண்ணிக்கை 1,900 ஐ தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.