1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (17:53 IST)

சூடான் தீ விபத்தில் 18 இந்தியர்கள் பலி ! அதிர்ச்சி சம்பவம் !

சூடான் தீ விபத்தில் 18 இந்தியர்கள் பலி ! அதிர்ச்சி சம்பவம் !
சூடான் நாட்டில் செராமிக் பொருட்கள் ஆலையில் கேஸ் டேங்கர் வெடித்த விபத்தில், 18 இந்தியர்கள் உள்ளிட்ட 23 பேர் பலியனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள பஹ்ரி என்ற பகுதியில் இயங்கி வந்த  சலூமி என்ற செராமிக் ஆலையில், திடீரென்று டேங்கர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
 
இந்தக் கொடூர தீ விபத்தில், 23 பெர் இறந்துள்ளதாகவும், இதில், 18 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
 
இதில், மூன்று பேர் தமிழர்களும் உயிரிழந்திருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.