வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 8 அக்டோபர் 2018 (08:10 IST)

பயங்கரவாதிகள் தாக்குதல்: 10 போலீஸார் உடல் கருகி பலி

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் அரசு அலுவலகங்களில் நடத்திய தாக்குதலில் 10 போலீஸார் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
 
கொடூரத்தின் உச்சமாய் நேற்று வர்டாக் மாகாணம் சயீத் அபாத் மாவட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த தலீபான் பயங்கரவாதிகள், அங்கிருந்த  அரசு அலுவலகத்திற்கு தீ வைத்தனர். இந்த தாக்குதலில் 10 போலீசார் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். இச்சம்பவம் ஆப்கானிஸ்தானில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.