வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

வாழைப்பூ குருமா

தேவையான பொருட்கள்:
 
வாழைப்பூ - 1 (முழுதாக)
வெங்காயம் - 3
தக்காளி - 3
பட்டை, கிராம்பு, அன்னாசிப் பூ, பிரியாணி இலை - தாளிக்க
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
 
அரைக்க தேவையான பொருட்கள்:
 
காய்ந்த மிளகாய் - 8
தேங்காய் - துருவியது 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
கசகசா - அரை ஸ்பூன்
பூண்டு - ஐந்து பல்
இஞ்சி - சிறு துண்டு

 
செய்முறை:
 
வாழைப்பூவை பிரித்து நடுவில் உள்ள நரம்பை நீக்கி இரண்டிரண்டாக நறுக்கி, மோர் கலந்து நீரில் போட்டு வைக்கவும்.
 
அரைக்க வைத்துள்ளவற்றில் வர மிளகாய், சோம்பு, சீரகம், கசகசா ஆகியவற்றை பத்து நிமிடம் கால் டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து தேங்காய் இஞ்சி பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
 
வெங்காயம் தக்காளியை பொடியாக இல்லாமல் சற்று நறுக்கவும் அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி தாளிக்க வைத்துள்ளவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம் போட்டு சிவக்க வறுக்கவும்.
 
இப்போது தக்காளி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும். எண்ணை பிரிந்ததும் வாழைப்பூவை போட்டு ஐந்து நிமிடம் வதக்கி அரைத்த மசாலவை இரண்டு டம்ளர் தண்ணீரில் கலக்கி ஊற்றி பத்து நிமிடம் கொதிக்க விடவும். இறக்கி கொத்தமல்லி தூவி இறக்கவும்.