1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 3 நவம்பர் 2020 (18:52 IST)

விஜய் பட தயாரிப்பாளரை சிறைக்கு தள்ளிய எஸ்.ஏ.சந்திரசேகர்!

விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் என்ற படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு 3 மாதம் சிறை தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

 
இரண்டு வேடங்களில் விஜய் மற்றும் ஸ்ரேயா நடித்த திரைப்படம் ’அழகிய தமிழ் மகன்’. இந்த படத்தை அப்பச்சன் என்ற தயாரிப்பாளர் தயாரித்து இருந்தார். இவர் விஜய்யின் தந்தையிடம் ரூ.1 கோடி வாங்கி மோசடி செய்ததாகவும், இதற்காக கொடுக்கப்பட்ட செக் ஒன்று பணமின்றி திரும்பி வந்ததாகவும் தெரிகிறது
 
இதனை அடுத்து இதுகுறித்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்று முன் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. பண மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் அப்பச்சனுக்கு 3 மாதம் சிறை தண்டனை வழங்குவதாக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது