புதன், 18 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2024 (08:12 IST)

‘தன் 25 ஆவது படத்தை நான் இயக்கவேண்டுமென சிவகார்த்திகேயன் ஆசைப்பட்டார்’… இயக்குனர் வெங்கட்பிரபு!

தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் இப்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்கும் முடிவுக்கு வந்துள்ளார். அந்த வரிசையில் தற்போது அமரன் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் இரு படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து அவர் சிபி சக்ரவர்த்தி மற்றும் சுதா கொங்கரா ஆகியோர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்காக அவர் ஒரு படம் நடிக்க உள்ளதாக முன்னர் தகவல் வெளிவந்தது. அந்த படம் சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக இருக்கும் என்றும், அதை வெங்கட் பிரபு இயக்குவார் என்றும் சொல்லப்பட்டது.

இதுகுறித்து இப்போது பேசியுள்ள வெங்கட்பிரபு “அவருடைய 25 ஆவது படத்தை நான் இயக்கவேண்டும் என சிவகார்த்திகேயன் ஆசைப்பட்டார்.  அந்த படம் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஆலோசிக்கப்பட்டது.  அவர்களே சொல்லும்போது இந்த படம் நடக்கும்” எனக் கூறியுள்ளார். வெங்கட்பிரபு தற்போது விஜய் நடித்துள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தை இயக்கி, அதன் ரிலீஸ் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.