செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 10 ஜனவரி 2019 (16:58 IST)

டுவிட்டர் பதிவில் மன்னிப்பு கேட்ட நடிகை - கோலிவுட்டில் பரபரப்பு

கனா படத்தின் வெற்றி விழாவின் போது அப்படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கி வெற்றி பெற்ற படம் கனா. மகளிர் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட படம். இதில் சத்தியராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் வெற்றி விழாவில்  ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் போது , சிலர் ஓடாத படத்துக்கு வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். ஆனால் கனா உண்மையான வெற்றி பெற்றுள்ளது’ இவ்வாறு பேசினார்.
 
அவரது பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது. இதனையடுத்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :கனா வெற்றி விழாவின் போது நான் விளையாட்டாகத்தான் பேசினேன். அப்படி நான் பேசியது யாருக்காவது வருத்தத்தை உண்டாகி இருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியிருக்கிறார்.