வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (19:42 IST)

விஜய்யை காக்கா பிடிக்க இப்படி செய்யலாமா? சிவாஜி ரசிகர்கள் கண்டனம்!

விஜய் நடித்த ‘பிகில்’ படத்தின் ஆடியோ விழா எந்த நேரத்தில் நடந்ததோ அதன்பின்னர் இந்த படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. விஜய்யின் பேச்சுக்கு அதிமுக அமைச்சர்கள், பாஜக பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திடீரென இறைச்சி கடைக்காரர்கள் ‘பிகில்’ படத்திற்கு எதிராக போராட தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் இன்று ‘பிகில்’ ஆடியோ விழாவிற்கு இடம் கொடுத்த தனியார் கல்லூரிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 
 
இந்த நிலையில் ‘பிகில்’ ஆடியோ விழாவில் பேசிய நடிகர் விவேக்கிற்கு சிவாஜி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிவாஜி சமூக நலப்பேரவை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: "பிகில்‌” ஆடியோ வெளியீட்டு விழாவில்‌ பேசிய நடிகர்‌ விவேக்‌, 1960 ஆம்‌ ஆண்டு வெளிவந்‌த நடிகர்திலகம்‌ சிவாஜி - வைஜெயந்தி மாலா நடித்த "இரும்புத்திரை" திரைப்படத்தின்‌ "நெஞ்சில்‌ குடியிருக்கும்‌” என்று தொடங்கும்‌ அருமையான பாடலைக்‌ கிண்டலடித்திருக்கிறார்‌.மேடை கிடைத்துவிட்டால்‌, கூட்டத்தைப்‌ பார்த்துவிட்டால்‌, சிலர்‌ உளற ஆரம்பித்துவிடுவார்கள்‌. அந்த வரிசையில்‌, நடிகர்‌ விவேக்கும்‌ இணைந்துள்ளார்‌. எந்த நடிகரை வேண்டுமானாலும்‌ தூக்கிவைத்துக்‌ கொண்டாடுங்கள்‌, எந்த இசையமைப்பாளர்‌ அல்லது பாடலை வேண்டுமானால்‌ பாராட்டுங்கள்‌, தவறில்லை. ஆனால்‌, ஒரு நடிகரை காக்காய்‌ பிடிப்பதற்காக, ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப்‌ பெற்றுள்ள ஒரு பாடலை கிண்டலடிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
 
 
ஏதோ இப்போதுதான்‌ அந்தப்‌ பாடல்‌ மக்களுக்கே தெரிய வருவதுபோலக்‌ கூறும்‌ இந்த ஞானசூனியம்‌, "நெஞ்சில்‌ குடியிருக்கும்‌” என்ற 1960 ல்‌ வெளிவந்த பாடல்‌ மிகவும்‌ வரவேற்பைப்‌ பெறவில்லை என்றால்‌ அதனை ஏன்‌ அதே டியூனை மீண்டும்‌ பயன்படுத்தவேண்டும்‌ எனக்‌ கூறத்‌ தயாரா? டியூனுக்கு ஏற்பட்ட பஞ்சம்‌ காரணமாக, பிரபலமான டியூன்‌ என்பதாலேயே அதனைக்‌ காப்பியடித்து பயன்படுத்தியிருக்கிறார்கள்‌ என்ற சாதாரண அறிவுகூட இல்லாமல்‌ பேசியிருக்கிறார்‌ விவேக்‌. 
 
 
ஏற்கனவே, ஒரு திரைப்படத்தில்‌, "நடிகர்திலகத்தின்‌ புகழ்பெற்ற பராசக்தி திரைப்படத்தில் நீதிமன்றக்‌ காட்சி வசனத்தைப்‌ பேசிக்‌ கிண்டலடித்திருந்தார்‌ விவேக்‌. இப்போது நடிகர்திலகத்தின்‌ அருமையான திரைப்படப்‌ பாட்லை பொது மேடையில்‌ கிண்டலடித்திருக்கிறார்‌. இதுபோல, தொடர்ந்து விவேக்‌ செய்தால்‌, அவருக்கெதிராக ரசிகர்களை ஒன்றுதிரட்டி, நடிகர்திலகம்‌ சிவாஜி சமூகநலப்பேரவை போராட்டம்‌ நடத்தும்‌ என்று எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறோம்‌. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது