வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 17 டிசம்பர் 2018 (20:16 IST)

கமல் பண்ணலனா என்ன? விஜய் சேதுபதி இருக்காரே: கனவு கதையை படமாக்கி சாதித்த இயக்குனர்

விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்தின் கதை கமல் நடித்து இருக்க வேண்டியதாம். பாலாஜி தரணிதரன் முதலில் சீதக்காதி பட கதையை கமலிடம்தான் கூறினாராம். 
 
கதையை கேட்டு கமல், சூப்பரா இருப்பதாக பாராட்டினாராம். இதனால் பல மாதங்கள் கமலுக்காக காத்திருந்த பாலாஜி தரணிதரன் கடைசியில் விஜய் சேதுபதியை வைத்து தனது கனவு கதையை தற்போது முடித்துவிட்டார். 
 
இன்னும் 3 நாட்களில் இந்த படத்தை உலகமே காணப்போகிறது. மிகச்சிறந்த நடிகராக போற்றப்படும் விஜய் சேதுபதிக்கு இப்படம் மிகப்பெரிய மைல்கல் என கோலிவுட்டில் சொல்லி கொள்கிறார்கள். சீதக்காதி படம் சூப்பரா வியாபாரம் ஆகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.