வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 10 ஆகஸ்ட் 2024 (07:27 IST)

இலங்கை எழுத்தாளரின் நாவலைப் படமாக்கும் இயக்குனர் சீனு ராமசாமி!

கூடல் நகர் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சீனு ராமசாமி, அடுத்து தென்மேற்குப் பருவக் காற்று என்ற திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் ஆனார். அதன் பின்னர் அவர் இயக்கிய தர்மதுரை, கண்ணே கலைமானே ஆகிய திரைப்படங்களும் கவனம் பெற்றன.

விஜய் சேதுபதியை வைத்து அவர் இயக்கிய மாமனிதன் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. மாமனிதன் திரைப்படத்துக்குப் பிறகு ஜி வி பிரகாஷ் நடிப்பில் சீனு ராமசாமி இடிமுழக்கம் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இதையடுத்து அவர் புதுமுக நடிகர் ஏகன் நடிக்கும் கோழிப்பன்னை செல்லதுரை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரிகிடா சஹா கதாநாயகியாக நடிக்க யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த இருபடங்களும் தயாரிப்புப் பணிகள் முடிந்தும் இன்னும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் இப்போது இயக்குனர் சீனு ராமசாமி தன்னுடைய படம் பற்றி அறிவித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ என்ற நாவலை படமாக்க உள்ளதாகவும், விரைவில் நடிகர் நடிகைகள் பற்றிய தகவலை அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.