வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (14:56 IST)

ஆடியன்ஸை நாய்கள் என்று திட்டிய சாக்ஷி - கொந்தளித்த பொது மக்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களை புறம் பேசியதால் மக்களால் வெறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர் சாக்ஷி. ஆனால் தற்போது மீண்டும்  மூலம் பிக்பாஸில் நுழைந்து மக்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறாரார்.


 
அதாவது நேற்றைய நிகழ்ச்சியில் ஷெரின், தர்ஷனின் காதலை கொச்சைப்படுத்திய வனிதா பேசினார். இதனால் ஷெரினுக்கும் சண்டை முட்டி வாக்குவாதம் நீடித்தது. பின்னர் வனிதா சொல்லியதை நினைத்து நினைத்து ஷெரின் அழுதுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஆறுதலாக சாக்ஷி சமாதானம் செய்த போது  நாய்கள் ரோட்ல குரைக்கும் அத பத்தி கவலைப்படுவியா என்று கூறியதோடு நான் வெளியே இருக்கும் மக்களைபற்றி தான் சொல்லுகிறேன் என்று தெரிவித்தார்.


 
இதனால் நேற்று இரவில் இருந்தே சாக்ஷிக்கு மக்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்து வருகிறது. மேலும் அவர் இந்த வார்த்தை சொல்லியதற்காகவே சாக்ஷியை வெளியேறவேண்டும் என கூறி வருகின்றனர்.