திங்கள், 8 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 19 செப்டம்பர் 2025 (09:07 IST)

காட்சிகளில் திருப்தி இல்லை.. மீண்டும் ஷூட் செய்யும் பிரசாந்த் நீல்!

காட்சிகளில் திருப்தி இல்லை.. மீண்டும் ஷூட் செய்யும் பிரசாந்த் நீல்!
கேஜிஎஃப் படங்களுக்குப் பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக ஆகியுள்ளார் பிரசாந்த் நீல். இதையடுத்து அவர் இயக்கிய சலார் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸாகி தோல்வி படமானது. இதனால் அதன் இரண்டாம் பாகம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில வாரங்களாக நடந்து வந்த நிலையில் சமீபத்தில் அதில் ஜூனியர் என் டி ஆர் கலந்துகொண்டார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக ருக்மிணி வசந்த் நடிக்கிறார். மேலும் டோவினோ தாமஸ் மற்றும் ரிஷப் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக நடந்த நிலையில் எடுத்த சிலக் காட்சிகளில் திருப்தி இல்லாததால் மீண்டும் அந்தக் காட்சிகளை ஷூட் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது.  படத்துக்காக ஜூனியர் என் டி ஆர் உடல் இளைத்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறி வருகிறார்.