வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 20 ஜூன் 2019 (11:53 IST)

கரகாட்டக்காரன் 2 எடுப்பது தேன் கூட்டில் கைவைப்பது போன்றது – பார்ட் 2-க்கு ராமராஜன் மறுப்பு !

கரகாட்டக்காரன் 2 படம் உருவானால் அதில் தான் நடிக்க மாட்டேன் என நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ் வணிகா சினிமாவின் கிளாஸிக்குகளில் கரகாட்டக்காரன் படத்துக்கு நீங்காத இடம் உண்டு. 1989 –ல் வெளியான இந்த படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி மற்றும் செந்தில் எனப் பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் இன்றும் அனைவராலும் விரும்பிக் கேட்கப்பட்டு கொண்டு வருகிறது.

வெளியாகி 30 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இப்போது இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் வேலைகளில் இயக்குனர் கங்கை அமரன் தீவிரமாக இறங்கியுள்ளார். இது சம்மந்தமாக நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் முதல் பாகத்தில் நடித்தவர்கள் அனைவரும் இரண்டாம் பாகத்தில் இடம்பெறுவார்கள் என கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கும் வேளையில் கரகாட்டக்காரன் படத்தின் கதாநாயகனான ராமராஜன் பார்ட் 2 வில் நடிக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்து ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் ‘ பல பேர் என்னிடம் இந்த யோசனையைக் கூறியுள்ளனர். கங்கை அமரன் கூட கேட்டார் ஆனால் சத்தியாமவதற்கான வாய்ப்பு பற்றி தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை கரகம் எடுத்து ஆடியாச்சு.. படமும் ஓடியாச்சு.. இனிமேல் அதைத் தொடுவது தேன் கூட்டில் கைவைப்பது போன்றது’ எனக் கூறியுள்ளார்.