வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 23 ஜனவரி 2020 (21:32 IST)

பெரியாருக்காக ரஜினி செய்த உதவி: 14 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து அவமரியாதையாக பேசி விட்டதாக கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும் குற்றம்சாட்டி வருகின்றனர். பெரியார் குறித்து ரஜினிக்கு எதுவும் தெரியாது என்றும் தெரியாத ஒன்றைப் பற்றி ரஜினி பேசியிருக்க கூடாது என்றும் தன்னுடைய பேச்சுக்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் 
 
இந்த நிலையில் நடிகரும் இயக்குனரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரஜினிகாந்த் குறித்து தனது முகநூலில் கூறியிருப்பதாவது:
 
எனக்கு அரசியல் தெரியாது! ஆனால் அண்ணன் சூப்பர் ஸ்டாரைப பற்றி எனக்கு மிக நன்றாகவே தெரியும்! திரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைப் பொறுத்தவரை, யார் மனதையும் நோகும் படி பேசக்கூடியவர் அல்ல! ஏன் அவரை திட்டுபவர்களைக் கூட பதிலுக்கு பதில் திருப்பி திட்டாத பண்பாளர்! எதையும் ப்ளான் செய்தோ, திட்டமிட்டோ அவதூறாக பேசக்கூடியவர் அல்ல! ஆனால் பெரியாரைப் பற்றி அவதூறாக பேசிவிட்டதாக கூறுகின்றனர்
 
அப்படி பேசக்கூடியவர் என்றால் 2006 ஆம் ஆண்டு பெரியாரின் தீவிரத்தொண்டரான இயக்குநர் திரு வேலு பிரபாகரன் அவர்கள், "பெரியார் கருத்துக்களை தாங்கி எடுத்த படத்தை வெளியிட முடியாமல் தவித்தபோது"
திரு வேலுபிரபாகரனே எதிர்பாராத பெரும் தொகையை கொடுத்து, அப்படத்தை வெளியிட எதற்காக ரஜினி சார் உதவி செய்ய வேண்டும்?
 
பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர்தான் திரு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் அவர்கள், எனவே அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்! என்று ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.