வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 17 ஜூலை 2024 (15:48 IST)

இயக்குனருக்கும் அல்லு அர்ஜுனுக்கும் இடையில் மோதலா… புஷ்பா 2 மேலும் தள்ளிப் போக வாய்ப்பு?

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. இந்த பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் படப்பிடிப்பு பல வெளிநாடுகளில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர்.

ஆகஸ்ட் மாதம் ரிலீஸாக இருந்த படம் டிசம்பருக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த தாமதத்துக்குக் காரணமே இயக்குனர் சுகுமார் எடுத்த ஒரு முடிவுதானாம். பல கோடி ரூபாய் செலவு செய்து எடுத்த சில காட்சிகள் தனக்குப் பிடிக்கவில்லை என்பதால் அதை அப்படியே ஓரம்கட்டிவிட்டு, மீண்டும் ஷூட் செய்யவேண்டும் என சொல்லிவிட்டதுதான் என சொல்லப்படுகிறது. இதனால் இயக்குனர் சுகுமாருக்கும் அல்லு அர்ஜுனுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இப்போது ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 4 ஆம் தேதி வெளியாவதும் சந்தேகம்தான் என்று சொல்லப்படுகிறது.