1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2024 (08:46 IST)

புஷ்பா 2 படத்தைத் தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் தயாரிப்பு நிறுவனம் யார் தெரியுமா?

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் படப்பிடிப்பு பல வெளிநாடுகளில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் பாகத்தை சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்னும் ஷூட் முடியாததால் டிசம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கபப்ட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழக திரையரங்க விநியோக உரிமையை ஏஜிஎஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள கோட் பட தெலுங்கு உரிமையை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில் புஷ்பா 2 ஏஜிஎஸ் நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.