1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2023 (13:43 IST)

நடிகை திரிஷாவுக்கு காவல்துறை கடிதம்

வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த விவகாரத்தில் எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளிக்க திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 
 
தமிழ் சினிமாவின் பிரபலமான வில்லன் நடிகரான மன்சூர் அலிகான், அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் லியோ படம் குறித்து இவர் பேசியபோது த்ரிஷா குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு த்ரிஷா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் லோகேஷ் கனகராஜ், குஷ்பூ, சிரஞ்சீவி உள்ளிட்ட பலரும் மன்சூர் அலிகானுக்கு கண்டனங்கள் தெரிவித்திருந்தனர்.
 
இதுதொடர்பாக மன்சூர் அலிகான் மேல் வழக்கு தொடரப்பட்ட நிலையில் சமீபத்தில் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கையும் வெளியிட்டார் மன்சூர் அலிகான். அவர் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் த்ரிஷாவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். 
 
இவ்விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தது.
 
இந்த விவகாரம் தொடர்பாக தொடர்பாக திரிஷா தரப்பிடம் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளிக்க திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 
 
திரிஷாவை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக  நடிகர் மன்சூர் அலிகானிடமும் ஆயிரம் விளக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.