1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (19:02 IST)

மீசை, தாடியெல்லாம் முளைக்குது... ப்ளீஸ் பியூட்டி பார்லர் ஓபன் பண்ணுங்கப்பா - புலம்பிய VJ பார்வதி!

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு     நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதனால் ஊரில் உள்ள ஒரு கடைகூட திறக்கவில்லை. அப்டியே திறந்தாலும் அத்யாவசிய தேவைகளை வாங்குவதற்கு மட்டுமே கடைகள் திறக்கின்றனர். அதுவும் காலையில் வெறும் 2 மணிநேரம் மட்டும் தான். இதனால் இளைஞர்கள் மிகவும் பாதிக்கப்படுவது ஒன்று நொறுக்கு தீனி பொருட்கள் சாப்பிடமுடியவிலையே என்று, மற்றொன்று பியூட்டி பார்லர்கள் ஓபன் செய்யவில்லை என்ற இரண்டும் மிகவும் வருத்தத்தை கொடுத்துள்ளது ஆளுங்களுக்கு .

இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பெண் பிரபலங்கள் மொழு மொழுனு வைத்திருந்த முகத்தில் மீசை முடி , தாடியெல்லாம் வளர்கிறது என்று கவலை கொள்கிறார்கள். ஆம், பிரபல இணையதள சேனலான கலாட்டா தமிழ் யூடியூப்பில் தொகுப்பாளினியாக இருக்கும் VJ பார்வதி தனது சமூகவலைதளப்பக்கத்தில் "பியூட்டி பார்லர் இல்லாததால் மீசை எல்லாம் முளைத்து விட்டது. எல்லா பொண்ணுங்களும் இப்போ மீசை மச்சனா மாறியிருப்பாங்க. இப்டியே போயிட்டு இருந்தால் எந்த பொண்ணையும் எந்த பையனும் பார்க்கமாட்டேன். ப்ளீஸ் ப்ளீஸ்...பியூட்டி பார்லரை ஓபன் பண்ணுங்க என்று  வேடிக்கையாக புலம்பியுள்ளார்  பார்வதி. இந்த வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.