செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஜூன் 2020 (12:24 IST)

மும்பையிலும் 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பா ரஞ்சித்

தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட பள்ளி மாணவர்களுக்கான அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் மும்பை உள்பட பிற மாநிலங்களில் தமிழ் வழியில் படித்து வரும் மாணவர்களுக்கும் தேர்வு இன்றி தேர்ச்சி செய்யப்பட்டதாக அறிவிக்க வேண்டும் என்று ஏற்கனவே நாம் கட்சி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்
 
இந்த நிலையில் தற்போது இதுகுறித்து இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் தனது டுவிட்டரில் இதுகுறித்து ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்ததை போல, தமிழ்வழி பயிலும் மற்ற மாநிலத்திலும், குறிப்பாக மும்பை தாராவி பகுதியில் தமிழக பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களின் தேர்வை ரத்து செய்து, தேர்ச்சி பெற்றவர்களாக தமிழக முதல்வர்  அறிவிக்க வேண்டும் என்பதே அம்மக்களின் எதிர்ப்பார்ப்பு! குரல் கொடுப்போம்!! என்று பதிவு செய்துள்ளார்.