தொடர்புடைய செய்திகள்
- இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய யூஜிசி பரிந்துரை!
- ஜூலை மாதம் சிபிஎஸ்இ தேர்வுகள் நடக்குமா? உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தகவல்
- 10,11ஆம் வகுப்பு தேர்வு: அரசு தேர்வுகள் இயக்குநர் புதிய உத்தரவு
- கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு ரத்து: அதிரடி அறிவிப்பு
- கல்லூரி தேர்வுகள் ரத்தா? - உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்..!
பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு உண்டா? அண்ணா பல்கலை ஆலோசனை
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 10ஆம் வகுப்பு தேர்வு உள்பட பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் கலைக்கல்லூரி மாணவர்களின் தேர்வுகளை ரத்து செய்ய யுஜிசி பரிந்துரை செய்துள்ளது.
இந்த நிலையில் பொறியியல் கல்லூரிகளின் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், கொரோனோ தீவிரம் குறைந்தபின் அரசின் ஆலோசனை மற்றும் ஒப்புதல் பெற்று தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அண்ணா பல்கலை கூறியுள்ளது
ஆனால் அதே நேரத்தில் பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு வைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் ஜூலை இறுதியில் பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது
பொறியியல் இறுதியாண்டு மாணவர்கள் புதிதாக நிறுவனங்களில் பணிக்கு சேர வேண்டிய நிலை இருப்பதால் அவர்களுக்கு தேர்வு வைக்க வேண்டியதன் அவசியம் கருதி ஜூலை இறுதியில் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இறுதியாண்டு மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே ஆன்லைன் முறையில் தேர்வை எழுதுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அண்ணா பல்கலைகழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
