வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (20:04 IST)

எத்தனை தடைகள் வந்தாலும் சிம்பு படத்தை முடித்தே தீருவேன் – சுரேஷ் காமாட்சி

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார் என்பதும், அவருக்கு சிம்பு ரசிகர்கள் ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து திக்குமுக்காட வைத்தனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிம்பு என்ற ஒரே ஒரு சகோதரனுக்கு நான் ’மாநாடு’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பளித்தேன். அதனால் எனக்கு லட்சக்கணக்கான சகோதரர்கள் கிடைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர்,இப்படத்திற்கு எத்தனை தடைகள் வந்தாலும் அதை முறியடித்து இப்படம் வெளியாகும்  என தெரிவித்துள்ளார்.