வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 10 ஜூலை 2020 (16:52 IST)

’’நட்புக்கு ஒண்ணுன்னா சும்மா விட மாட்டாறு..’’ சிம்புவை புகழ்ந்த வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவில் உள்ள இளம் இயக்குநர்களில் முக்கியமானவர் வெங்கட்பிரபு,  சென்னை 600017 ல்  இயக்குநராக அறிமுக ஆன இவரது வளர்ச்சி எல்லோருக்கும் தெரியும்.

கடந்த 2012 ஆம் ஆண்டிலேயே அவர் நடிகர் அஜித்தை நடிப்பில் மங்காத்தா என்ற படத்தை இயக்கினார்.  அடுத்து மாநாட்டு என்ற படத்தை சிம்புவை வைத்து தொடங்கவுள்ளார்.

இந்நிலையில் அவர் நடிகர் சிம்பு குறித்து , ஒரு யூடியுப் சேனலில் தனது கருத்துகளை அவர் பகிர்ந்துள்ளார்.

மறைந்த பிரபல பாடகர் மலேசிய வாசுதேவனின் மகள் யுகேந்திரனுடன் நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்ற வெங்கட்பிரபு,  நடிகர் அஜித், விஜய், சூர்யா,சிம்பு ஆகியோரைப் பற்றிய சுவாரஸ்யமான விசயங்களைப் பகிந்து கொண்டார்.

இந்நிலையில், யுகேந்திரன் சிம்புவின் போட்டைக் காட்டியதும் தனது நினைவுகளைப் பகிந்த வெங்கட்புரபு, நான் மாநாடு கதையில்ன் ஒன் லைன்னை சொன்னபோது, நடிகர் சிம்புவுக்கு அது பிடித்துவிட்டது. அதன்பின்னர் சூட்டிங்கில் ஆர்முடன்  கலந்துகொண்டார். நட்பு விசயத்தில் எதாவது ஒண்ணு என்றால் அவர் எல்லொருகும் உதவி செய்வர் வழக்கம்போலவே கலகலப்பாக இந்தப் பேட்டியில் பதிலளித்து சிம்புவை புகழ்ந்துள்ளார் வெங்கட்பிரபு.