1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (15:37 IST)

கிளைமேக்ஸில் சண்டை போடுவது போர் அடிக்கிறது – இயக்குனரிடம் புலம்பிய தல!

நடிகர் அஜித் பற்றி இயகுனரும் அவரின் நெருங்கிய நண்பருமான வெங்கட் பிரபு ஒரு சுவாரஸ்யமான தகவலை சொல்லியுள்ளார்.

நடிகரும் இயக்குனருமான வெங்கட் பிரபு இப்போது சிம்புவின் நடிப்பில் மாநாடு படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் அவர் நடித்த லாக்கப் படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அதனால் அந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது ஒரு நேர்காணலில் அவரிடம் அஜித் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் ஒரு சுவார்ஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் ‘என்னிடம் இன்னும் எத்தனை நாளைக்குதான் வழக்கமான கதைகளிலேயே நடித்துக் கொண்டு இருப்பது. கிளைமாக்ஸ் காட்சியில் சண்டை போட்டு ஒரு ஊரையும் நாட்டையும் காப்பாற்றும் படி நடிப்பது போர் அடிக்கிறது. அதனால் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளாராம்.

அதனால் அஜித் இனிமேல் வித்தியாசமான கதைகளில் நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.