வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 25 ஜூலை 2019 (18:39 IST)

அழகிய காதலை வெளிப்படுத்தி மனதை உருகவைக்கும் "அகலாதே" பாடல் இதோ!

நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெற்றுள்ள கணவன் மனைவியின் காதலை வெளிப்படுத்தும் "அகலாதே" பாடல் சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது.


 
தமிழ் சினிமாவின் டாப் நடிகர் அஜித் எச். வினோத் இயக்கும் ‘நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்துவருகிறார். இந்த படம் கடந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பிங்க்' படத்தின் ரீமேக். 
 
இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்திஇல் அஜித்திற்கு ஜோடியாக முதன் முறையாக தமிழில் வித்யா பாலன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ‘பிங்க்’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் நடிக்கின்றனர். மேலும், அர்ஜுன் சிதம்பரம், ரங்கராஜ் பாண்டே, அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம் உட்பட பலர் நடித்துள்ளனர். 
 
அண்மையில் வெளிவந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதையடுத்து இப்படத்தின் சிங்கிள் டிராக் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் காத்திருந்த வேளையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள "அகலாதே" பாடல் நாளை 6 மணிக்கு வெளியாகும் என நேற்று ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்தார் போனி கபூர். 
 
அந்தவகையில் சற்றுமுன் இந்த பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது. "நடை பாதை பூவனங்கள் பார்த்து.... நிகழ்கால கனவுகளில் பூத்து" என வரிகளில் தொடங்கும் இப்பாடல் கணவன் மனைவியின் அழகிய காதலை வெளிப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கியுள்ளனர். 
 
பா. விஜய்யின் வரிகளில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து உயிர் கொடுத்துள்ளார். பிரித்தீவ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் மெல்லிய குறளில் கேட்பவர்களின் உள்ளதை உருகவைத்துள்ளனர்.