1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 3 மே 2021 (23:37 IST)

ஆக்ஸிஜன் தரத்தை அதிகரிக்க வேண்டும் - ஜெயம்ரவி பட நடிகை டுவீட்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்தவர் கங்கனா ரணாவத். இவர் ஆக்சிஜன் பயன்பாடு தரத்தை உயர்த்த வேண்டுமெனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கங்கனா ரணாவத். இவர் தற்போது முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

எனவே, சாதாரண மக்கள் மமுதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்.

இதுகுறித்து நடிகை கங்கனா ரனாவத் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார். அதில், கொரொனா இரண்டாம் அலை பரவுவதால் எல்லோரும் ஆக்ஸிஜன் உற்பத்தியைப் பெருக்கி வருகின்றனர்.  அவை இந்தச் சுற்றுச்சூழலிலிர்ந்து  எடுத்திருப்பார்கள். எனவே  இயற்கையிலிருந்து எடுப்பவர்கள் காற்றிலு நிவாரணம் கொடுக்க வேண்டும். காற்றின் தரத்தை உயர்த்த நாம் உறுதி மொழி எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.